புதன், 18 ஜூலை, 2007

ஸ்ரீலங்காவின் கிழக்கு படுக்கையில் பூமியதிர்ச்சி

ஸ்ரீலங்காவின் கிழக்கே வங்காள விரிகுடா கடற்பகுதியில் இன்று காலை 9.56 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, கண்டியிலிருந்து கிழக்குப் படுக்கையாக 406 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடற் பரப்பில் 5.2 றிட்சர் அளவான பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளது எனவும் இப் பூமியதிர்சியால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லையெனவும் பேராதனை பல்கலைகழக புவியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில நஹாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி,மாத்தளை,கொழும்பு மற்றும் சில பகுதிகளிலும் இப் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

2 கருத்துகள்:

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.