வியாழன், 17 மே, 2012

சரத் பொன்சேகாவுக்கு நாளை விடுதலை?


தமிழின அழிப்புக்கு முன்னின்றவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு உரியவருமான சரத் பொன்சேகா நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியால் விடுதலை  செய்யப்படவுள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனும் நிபந்தனைக்கேற்பவே சரத் பொன்சேகா விடுதலையாக இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

2012.05.16 ஆம் திகதி இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டில் திருமதி அனோமா பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது நாளை அல்லது நாளை மறுதினம் சரத் பொன்சேகா  விடுதலை செய்யப்படுவாரென ஜனாதிபதி கூறியதாக ஏஎப்பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

வெள்ளி, 11 மே, 2012

ஈ பி ஆர் எல் எவ் (நாபா) துரைரெத்தினம் சுரேஸ் அணிக்கு தாவினார்!


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா பிரிவு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெத்தினம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஸ் அணியில் இணைந்து கொண்டுள்ளார்.

வியாழன், 10 மே, 2012

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் குளிர் காயும் தீய சக்திகளின் சுவரொட்டிகள்!


முள்ளிவாய்க்கால் அவலத்தின் பேரால் மீண்டும் தமிழ் மக்களை சிக்கலுக்குள் கொண்டு வர சில தீய சக்திகள் முயன்று வருகின்றனர், இதன் ஓரங்கமாக வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இத் தீய சக்திகளின் சுவரொட்டிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் "தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக முன்னிற்கும் இயக்கம்" எனும் பெயரில் சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.