புதன், 31 டிசம்பர், 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2009



பிறக்கும் புத்தாண்டில் தீயன கழிந்து நல்லன பெருக வேண்டுமென "களத்துமேடு" வாழ்த்துகின்றது.

யாழ்ப்பாண எதிர்கால நோக்கு - பரிசளிப்பு விழா!

யாழ்ப்பாணத்தின் எதிர்கால நோக்கு எனும் தொனிப்பொருளில் தொழில்சார் மற்றும் கல்விக் கண்காட்சியும் களிப்பூட்டு விழாவும் யாழ்ப்பாண மாவட்ட ஸ்ரீலங்கா இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீயின் ஏற்பாட்டில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது, இந் நிகழ்வில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டதுடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்கைக்கோள் மூலமாக அகன்ற தொலைக்காட்சியில் தமிழில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

இந் நிகழ்வில் இடம்பெற்ற பாடல் போட்டியில் தோற்றி முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக நுண்கலைப் பீட 3 ஆம் வருட மாணவி றஞ்சன் தாரிணி களிப்பூட்டு விழாவின் போது "உயிரே உயிரே" எனும் பாடலைப் பாடி "வடக்குத் தாரகை" (North Star) எனும் கிரீடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன், அசோஷியேற்றட் மோட்டார் கொம்பனி அன்பளிப்புச் செய்த மாருதி சுஷுக்கிக் காரினை முதலாம் பரிசாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இங்கு இடம்பெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற மீசாலையைச் சேர்ந்த விழிப்புலன் இழந்த திரு.குலேந்திரன் ஜெகதீசன் இரண்டாம் பரிசான இரு சக்கர உழவு இயந்திரத்தினைப் பெற்றுக்கொண்டார்.

.


மூன்றாம் இடத்தினை வென்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக சமூக விஞ்ஞான பிரிவு மாணவனான, சாவகச்சேரியைச் சேர்ந்த திரு.மகாலிங்கம் தயாபரன், மூன்றாம் பரிசாக உந்துருளியைப் பரிசாகப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தவின் தமிழ் உரையின் ஒளிப்பேழை







செவ்வாய், 30 டிசம்பர், 2008

சீமானும் செல்வியும் - ஷோபாசக்தி

இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.

“நீ சொல்லும் கருத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை, ஆனாலும் அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக் கொடுத்துப் போராடவும் நான் தயார்” என்ற வோல்தயரின் புகழ்பெற்ற கூற்றை வெறுமனே வீம்புக்கு உச்சரிப்பவர்களில் நானும் ஒருவனல்ல. அந்தக் கூற்றை நான் முற்று முழுதாக விசுவாசிப்பவன். இந்திய அரசு, இலங்கை அரசு, அமெரிக்க அரசு என எது குறித்தும் எவர் வேண்டுமானாலும் தமது கருத்துகளைக் கூறலாம். அது ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது எதிராகவும் இருக்கலாம், எதுவாகவும் இருக்கலாம். அதைச் சொல்வதற்கு சாமான்யர்களுக்கும் தடையற்ற சுதந்திரம் வேண்டும். இதற்குப் பெயர்தான் முழுமையான கருத்துச் சுதந்திரம். அந்தக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும் போது தடைமீறலும், உருவப்பொம்மை எரிப்புகளும் காலணியால் மூஞ்சிக்கு எறிதலும் மக்கள் திரளின் இயல்பான போராட்ட வடிவங்களே! அவை அறம் சார்ந்த நெறிகளே!

விடுதலைப் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் நிராகரிப்பவன் என்ற முறையில் நான் சீமான் உள்ளிட்டவர்கள் மீதான எனது விமரிசனத்தை ஏற்கனவே வைத்துள்ளேன். அதே வேளையில் கொளத்தூர் மணி போன்ற திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் பார்ப்பன எதிர்ப்பு, சாதியொழிப்பு, சமூகநீதிக்கான போராட்டம் போன்ற சீரிய அரசியல் பங்களிப்புகளை நாம் மறந்துவிட இயலாது. பார்ப்பனிய ஊடகங்களும் காங்கிரஸ் கட்சியினரும் இந்தக் கைதுகளை நியாயப்படுத்துவதன் பின்னணியில் அவர்களின் பாரம்பரியத் திராவிட இயக்க எதிர்ப்பும் ஒரு ஊக்கியாகச் செயற்படுவதையும் நாம் கவனிக்கலாம். உண்மையில் கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்கள் அரசியல் அதிகாரங்களற்ற சாதாரணர்கள். புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் பால் தக்கரேயையோ மருத்துவர் இராமதாஸையோ இப்படிக் கைதுபண்ணிவிட இந்திய அரசால் முடியுமா? இந்திய ‘ஒருமைப்பாட்டுக்கு’ பங்கம் விளைவிப்பவர்களைக் கைது செய்வதென்றால் நம்பர்1 பயங்கரவாதி நரேந்திர மோடியையல்லவா முதலில் கைதுசெய்ய வேண்டும்.

சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கைதுக்காக இந்தச் சிலிர்ப்புச் சிலிர்ப்பவர்கள் இந்தியா முழுவதும் காலவரையற்றுச் சிறைகளில் வாடும் அல்லது ‘என்கவுண்டர்’களில் சுட்டுத்தள்ளப்படும் நக்ஸ்பாரிகள் குறித்தோ இஸ்லாமியர்கள் குறித்தோ காஷ்மீரிகள் குறித்தோ ஏன் எதுவும் பேசுவதில்லை என்றொரு கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வி தருக்கத்துக்குப் பொருந்துமேயொழிய நடைமுறைக்கு உதவாது. தீபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்காதவர்கள் ஈராக் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்கக் கூடாது, திண்ணியம் கொடுமை குறித்துப் பேசாதவர்கள் கயர்லாஞ்சிக் கொடுமைகள் குறித்துப் பேசக் கூடாது என்றெல்லாம் நாம் சொல்ல முடியுமா என்ன. குறிப்பிட்ட இந்த அநீதியைக் கண்டித்தாவது பேசுகிறார்களே என்று நாம் அவர்களை ஆதரிப்பதும் அவர்களோடு இணைந்து நாமும் குறிப்பிட்ட அநீதியைக் கண்டிப்பதும்தானே சரியாயிருக்க முடியும். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிற அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் என நாம் அவர்களிடம் கோர முடியும். குறிப்பிட்ட விடயத்தில் வெளிப்படும் அவர்களின் சனநாயக் குரலும் போராட்டப் பண்பும் உலகம் தழுவிய பார்வையாக விரிவடைய வேண்டும் என நாம் வேண்டிக்கொள்ள முடியும்.

முக்கியமாக சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கைதுகளுக்காகக் கொந்தளிப்பவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அல்லது அனுதாபிகளாயிருப்பதால் இந்தத் திடீர்க் கருத்துச் சுதந்திர போராளிகளுக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள பொருந்தாத் தொடர்பு குறித்து இங்கே சற்று விளக்கவதும் பொருத்தமானதே. “தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க, தூங்காது செய்யும் வினை” என்கிறது தமிழ்மறை.

தமிழக அரசால் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு இம்முறை பிணை மறுக்கப்பட்டிருப்பினும் அடுத்தடுத்த தவணைகளில் அவர்கள் வெளியே வருவார்கள். கொளத்தூர் மணி வருவது தாமதமாக வாய்ப்புகளிருப்பினும் அவரும் வெளியே வருவார் என்பது நிச்சயம். இவர்கள் மீதான விசாரணைகள் நடந்தாலும் அது நீதிமன்றங்களில் பகிரங்கமாக நடத்தப்படும். இவர்களுக்குத் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கும் தங்களுக்கென வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படும். “மாங்குயில் கூவிடும் பூங்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” எனச் சிறைச்சாலையைப் பூஞ்சோலையாக உருவகித்துச் சீமானும் மணியும் தாரளமாகப் பாடலாம். அப்படிப் பாடுவதுதான் திராவிட இயக்க மரபு. அப்படிப் பாட வாய்ப்புக் கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் மரபு.

ஆனால் தோழர்களே புலிகளால் கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன? விஜிதரன் எங்கே? தில்லை எங்கே? தீப்பொறி கோவிந்தன் எங்கே முருகநேசன் எங்கே? மத்தியாஸ் எங்கே? சின்ன மெண்டிஸ் எங்கே? பதுமன் எங்கே? கையில் மாற்றுடைகளுடன் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுவாயிலில் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற மாத்தையா எங்கே? புலிகளின் சிறையில் ஒரே இரவில் அருணாவால் கொல்லப்பட்ட அய்ம்பத்தெட்டு உயிர்களுக்கும் வகையென்ன? பதிலென்ன? இப்படியாகப் புலிகளால் அவர்களின் சிறையில் சாகடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களுக்கான நீதியை நாம் யாரிடம் கோருவது? இங்கே மாத்தையாவின் அரசியலுக்கோ சின்ன மெண்டிஸின் அரசியலுக்கோ வக்காலத்து வாங்குவதல்ல எனது நோக்கம். புலிகள் தங்களால் கைதுசெய்யப்படுபவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்லவே மேலுள்ளவர்களை உதாரணம் காட்ட நேரிட்டது. பல்கலைக் கழக மாணவனாகட்டும் தங்கள் இயக்கத்தின் பிரதித் தலைவராகட்டும் எல்லா முரண்களையும் புலிகள் கொலைகளாலேயே தீர்த்து வைத்தார்கள். புலிகளின் இராச்சியத்திலே சவக்குழிதான் நீதிமன்றம். துப்பாக்கிச் சனியன்தான் நீதிபதி.

இன்று சீமானின் குரலும் கொளத்தூர் மணியின் குரலும் நசுக்கப்பட்டுவிட்டதாகத் துடிக்கிறோமே! அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டுவிட்டதாகப் பதறுகிறோமே, இதே பதற்றமும் துடிப்பும் கொதிப்பும் புலிகளால் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களின் விசயத்திலும் நமக்கு இருக்க வேண்டுமல்லவா. தமக்கு உவப்பில்லாத கருத்துகளைச் சொன்னதால் புலிகளால் கொல்லப்பட்ட அறிவுஜீவிகளுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மாற்று இயக்கப் போராளிகளும் மிதவாதக் கட்சித் தலைவர்களுக்கும் கணக்கில்லையே! விஜயானந்தன், விமலேஸ்வரன், ராஜினி திரணகம, அ.அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், சின்னபாலா, அதிபர் இராசதுரை என்று எத்தனையோ மனிதர்களின் மாற்றுக் குரல்களை புலிகளால் துப்பாக்கியால் நிறுத்தியிருக்கிறார்கள். தொழிற்சங்கங்கங்கள், சாதி ஒழிப்பு அமைப்புகள் இடதுசாரிக்கட்சிகள் என எல்லாவகையான மாற்று அரசியல் இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட்டுள்ளன. புலிகளின் இந்தக் கருத்துச் சுதந்திர மறுப்பு ஈழத்தைத் தாண்டிப் புகலிடங்களுக்கும் பரவியது. சரிநிகர், தினமுரசு பத்திரிகைகள் புகலிட நாடுகளில் தடைசெய்யப்பட்டன. தொழிலாளர் பாதை, செந்தாமரை, மனிதம், தாயகம் போன்ற பல மாற்றுக் கருத்துப் பத்தரிகைகள் மிரட்டப்பட்டன. பத்திரிகையாளர்கள் தெருக்களில் வைத்துத் தாக்கப்பட்டார்கள்.

இம்முறை சீமான் கைது செய்யப்பட்டபோது ஆயிரம் முறை கைதாவதற்குத் தான் தயாராயிருப்பதாக அவர் முழங்கினார். செல்வியும் சீமானைப் போல கலைத்துறை சார்ந்தவர்தான். அவர் நாடக இயக்குனர், நடிகை மற்றும் கவிஞர். கவிதைக்கான சர்வதேச விருதான PEN விருதைப் பெற்றவர். புலிகளுக்கு மாற்றான கருத்துகளை அவர் பேசியதால் அவர் புலிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் சீமானைப்போல “ஆயிரம் தடவைகள் சிறை செல்லவும் தயார்” என்று அவர் சொல்வதற்கு வாய்ப்புகள் ஏதுமிருக்கவில்லை. ஏனெனில் புலிகள் அவரை ஒரு தடவைதான் கைது செய்தார்கள், அப்படியே கொன்று புதைத்துவிட்டார்கள்.

நாங்கள் தமிழக அரசின் கைதுகளைக் கண்டிக்கிறோம். சீமான், கொளத்தூர் மணி ஆகியோரின் கைதால் கவலையுற்றிருக்கும் தோழர்களின் துயரில் நாங்களும் பங்கெடுக்கிறோம். புலிகளிடம் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி கொடுத்துவிட்ட துயரிலும் இனியும் பறிகொடுக்கப்போகும் பதற்றத்திலுமிருக்கும் எங்கள் உணர்வுகளிலும் பங்கெடுக்குமாறு அந்தத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம். புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிராக இந்தத் தோழர்கள் வருங்காலங்களிலாவது குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறோம். இதன் முலம்தான் கருத்துச் சுதந்திரம் மீதான அவர்களது வேட்கை முழுமை பெறுமென வலியுறுத்தவும் விரும்புகிறோம்.

இரு பின்குறிப்புகள்:

1. சிறைச்சாலை, பூஞ்சோலை என்பதெல்லாம் சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் விவகாரங்களில் சாத்தியமானது. ஆனால் அப்சல் குரு போன்ற எண்ணற்றவர்களுக்கு இந்திய அரசு சட்டபூர்வமான உதவிகளைக் கூட மறுத்திருக்கிறது என்ற புரிதலுடனேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

2. புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைப் படிக்கும் ஒருவர் கொடுப்புக்குள் ஓர் ஏளனப் புன்னகையுடன் ‘துரோகிகள் கொல்லப்படத்தான் வேண்டும்’ என முணுமுணுப்பாரானால் அவருக்குக் கருத்துச் சுதந்திரம், வன்முறை எதிர்ப்பு, மணதண்டனை ஒழிப்புக் குறித்தெல்லாம் பேச எந்த யோக்கியதையும் கிடையாது என்பதை ஒருகணம் மனதில் நிறுத்திக்கொண்டு விட்ட இடத்திலிருந்து அவர் புன்னகையைத் தொடராலாம்.

நன்றி: சத்தியக் கடதாசி

வியாழன், 25 டிசம்பர், 2008

வன்னிச் சமரில் கொல்லப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய்களின் அடையாள அட்டைகள்!

வன்னியை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படைதரப்பினரை எதிர்த்து 2008.12.21 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதலை நடத்தியதில் பல இராணுவத் தளபாடங்களையும், ஸ்ரீலங்கா படையினரின் உடலங்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இச் சமரில் ஒரு ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டிருந்தார், கைப்பற்றப்பட்டிருந்த சில உடலங்களில் தேசிய அடையாள அட்டைகளும், புகைப்படங்களும் மற்றும் இலக்கத்தகடும் காணப்பட்டன என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

1. பெயர்: செனரத் களுவாஞ்சிலாகே நுவன்குமார சேனரத்
பிறந்த திகதி: 1990.05.05
விலாசம்: வலிபில்லாவ, திஹல்ல
தேசிய அடையாள அட்டை இல: 901261563V

2. பெயர்: வட்டுவாவே ஹெதர சரத் நந்தஸ்ரீ
பிறந்த திகதி: 1987.04.27
விலாசம்: கண்டலம, தம்புள்ள
தேசிய அடையாள அட்டை இல: 871181047V

3. பெயர்: வலதர ஆராட்சியலாஹே அமித் ஜயதிலஹ
பிறந்த திகதி: 1989.04.17
விலாசம்: கலமடுஹஸ்தென்ன, பண்டாரவளை
தேசிய அடையாள அட்டை இல: 891082258V

4. பெயர்: ஜயதிஸ்ஸஹே ஜயந்த அருணகுமார
பிறந்த திகதி: 1986.11.14
விலாசம்: குஞ்சிக்குளம், குருந்தன்குளம்
தேசிய அடையாள அட்டை இல: 863190606V

5. பெயர்: சிங்கப்புலி முதியன்சலாஹே சமிர உதயங்க
பிறந்த திகதி: 1982.02.09
விலாசம்: கபுகஸ்தன்ன, பலாங்கொட
தேசிய அடையாள அட்டை இல: 820402901V


6. பெயர்: ரத்னாயக்க முதியன்சலாஹே சந்திரகுமார ரத்னாயக்க
பிறந்த திகதி: 1983.07.16
விலாசம்: குமுக்கடவெல, மொரகொல்லாஹம
தேசிய அடையாள அட்டை இல: 831982330V

ஒளிப் பேழை

நன்றி: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


நத்தார் வாழ்த்துக்கள்


வாசகர்கள் அனைவருக்கும் களத்துமேட்டின் நத்தார் வாழ்த்துக்கள்!

செவ்வாய், 23 டிசம்பர், 2008

விடுதலைப் புலிகளினால் சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீலங்கா படை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் பல இழப்புக்களுக்கும் மத்தியில் முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிரத் தாக்குதலை மேற்கொண்டதில் கடந்த 2008.12.16 ஆம் திகதி கிளாலியில் 50 பேருக்கும் அதிகமான ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டும், 160 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர், இம் முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகளினால் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

இம்முறியடிப்புத் தாக்குதலில் ஸ்ரீலங்கா படைத்தரப்பின் அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த 53 ஆம் கொமாண்டோ அணியின் 6 ஆம் சிங்கப் படைப் பிரிவின் 22 வயதுடைய திரு.நிஸாந்த றணசிங்க என்பவர் உயிருடன் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்.

நிஸாந்த ரணசிங்க ஊடகவியலாளருக்கு அளித்த செவ்வியின் ஒளிப் பேழை

நன்றி: சங்கதி

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சின்னப்பரந்தன்!

கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பு பரந்தனில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சின்னப்பரந்தன் பகுதி முழுவதையும் 2008.12.23 ஆம் திகதி இன்று தமது கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் 300 மீற்றர் நீளமான மண்ணரண்களைத் தாண்டி ஏ-35 பாதையில் அமைந்துள்ள சின்னப்பரந்தனைக் கைப்பற்றியதாகவும், இச் சமரில் 12 விடுதலைப்புலிகள் கொல்லப்பபட்டும், பலர் காயமடைந்தும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
">

திங்கள், 22 டிசம்பர், 2008

இந்தியாவுக்கு அகதியாகச் சென்ற சிங்களத் தம்பதியர்!

இலங்கைத் தமிழர்களுடன் இணைந்து சிங்களத் தம்பதியரும் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் செல்லும் போது இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

2008.12.20 ஆம் திகதி சனிக்கிழமை படகின் மூலம் தமிழகம் சென்ற 19 தமிழர்களுடன் இளம் சிங்கள காதல் தம்பதிகளான 30 வயதுடைய துஸா சந்தன மற்றும் 18 வயதுடைய சறுகா பில்கானி போன்றோரும் இடம்பெற்று இருந்தனர்.

கொழும்புப் பகுதியில் வாகனச் சாரதி பயிற்சி நிலையம் நாடாத்தி வந்த திரு.துஸா சந்தனவிடம் வாகனப் பயிற்சிக்காகச் சென்ற செல்வி.சறுகா பில்கானி காதல் வயப்பட்ட நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் வவுனியா பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள், இந் நிலையில் இவர்களுக்கு உதவி வழங்கிய தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற போது இத் தம்பதியரும் கூடவே சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணா அம்மானின் புதிய கட்சி உதயம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் கருணா அம்மான் அவ்வமைப்பின் உள்முரண்பாட்டிலிந்து மீண்டு தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஸ்தாபித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் செயற்படும் போது, ஸ்ரீலங்கா பேரினவாதிகளினால் ஈழம் எனும் பதத்தினை கட்சிப் பெயரில் இருந்து நீக்க கருணா அம்மான் நிர்ப்பந்திக்கப்பட்டார், அதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகப் கட்சிப் பெயரைச் சுருக்கிக் கொண்டார்.

இந் நிலையில் அக் கட்சியின் தலைவர் கருணா அம்மானுக்கும் உதவித் தலைவர் பிள்ளையானுக்கும் இடையே தலைமைத்துவ பிரச்சனை ஏற்பட்டது, இதனால் ஏற்பட்ட முறுகலில் சில உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள், பிள்ளையான் குழுவினராலும், தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் உயிராபத்து நிகழக்கூடும் என்பதனால், ஸ்ரீலங்காவில் இருந்து செயற்பட முடியாமல் பிரித்தானியாவுக்கு தப்பியோடினார் கருணா.

ஸ்ரீலங்காவில் தரித்து இருந்த பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் புரிந்துணர்வைப் பேணியதுடன், கிழக்கு மாகாணத்தில் அதிகாரம் செலுத்தத் தொடங்கியது, இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தினை விட்டு பின்வாங்கியதனை சாதகமாகப் பயன்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளெனும் பிள்ளையான் அணியினர் கிழக்கின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சியுடன் இணைந்து அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றினர், ஸ்ரீலங்கா தேர்தற் திணைக்களத்தில் அரசியற் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பதிவு செய்யப்படாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனித்து நிற்க முடியாத பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அடுத்து வந்த வடக்கு - கிழக்கு மாகாணசபையின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக தலைவரின்றி இருந்த கட்சிக்கு திரு.ரகு நந்தகோபனை உத்தியோகபூர்வ தலைவராக்கி ஸ்ரீலங்கா தேர்தற் திணைக்களத்தில் அரசியற் கட்சியாக பதிவு செய்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தினைக் கைப்பற்றி முதலமைச்சராக பிள்ளையான் சந்திரகாந்தன் பதவியேற்றுக் கொண்டார்.

பிரித்தானியக் குடியியல் சட்டத்துக்கு முரணாக உள்ளே வந்த காரணத்தினால் கருணா அம்மான் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் விடுதலையாகி ஸ்ரீலங்கா திரும்பிய சில காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தார் இதனைத் தொடந்து விநாயகமூர்த்தி முரளிதரனாக மாறிக் கொண்டார் கருணா.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே கொண்டிருந்த கருணா, கட்சியின் தலைமையை தன்னிடம் ஒப்படைக்கும் படி பிள்ளையானிடம் கேட்டுக் கொண்டிருந்தார், அதற்கு ரகு நந்தகோபன் உடன்படாத காரணத்தினால் காலவோட்டத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தலைநகரை அண்டிய பிரதேசத்தில் வைத்துக் சுட்டுக் கொல்லப்பட்டார், இத்தருணத்தில் கட்சியின் பெயரிலும், தலைமைப் பீடத்திலும் மாற்றம் செய்யவிருப்பதாக கருணா பத்திரிகைகளில் செய்திகளை விட்டிருந்தார் அதன் பின்பும் கட்சியினைப் பலப்படுத்தும் நோக்கில் பிள்ளையான், அஷாத் மௌலானா, மற்றும் கைலேஸ்வரராஜா போன்றோர் கட்சியின் பெயரினை மாற்ற கருணாவுக்கு எந்தவித அருகதைகதையும் இல்லையென பத்திரிகைகள் மூலமாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தனர்.

பிள்ளையான் குழுவினரிடமிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பு தனக்கு தரப்படவில்லையே எனக் கவலை கொண்ட கருணா தனக்கு விசுவாசமாக செயற்பட்ட இனிய பாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரை இணைத்து தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் புதிய கட்சியொன்றினை தொடக்கியுள்ளார், மட்டக்களப்பு நேச வீதியில் உள்ள அலுவலகத்தினை கிழக்கு மாகாண முகவரியாகக் கொண்டு இக் கட்சியின் தலைவராக கருணா விநாயகமூர்த்தியும் செயலராக இனியபாரதியும் மற்றும் பொருளாளராக சின்னத்தம்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் இக் கட்சிக்கான சின்னம் போன்ற பிற விபரங்கள் தயாரிக்கப்பட்டுவிடுமெனவும் அத்துடன் அரசியற் கட்சியாக தேர்தற் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு விடுமெனவும் ஊடகப் பேச்சாளர் திரு. தட்சணாமூர்த்தி கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு திரு.பிள்ளையான் சந்திரகாந்தன் தொடந்து தலைவராக இருப்பாரென திரு.கைலேஸ்வரராஜா ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

கட்சிக்குப் பெயரிடுவதில் திருப்தி காணாத கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் பெயரில் என்ன திருத்தம் செய்ய இருக்கின்றாரோ!

வெள்ளி, 19 டிசம்பர், 2008

வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் ஸ்ரீலங்கா விஜயம்!

ஸ்ரீலங்காவுக்கு வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், பங்களதேசம் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்த இவ்விராணுவ ஆலோசகர்கள் வவுனியா இராணுவ தலைமையகத்துக்குச் சென்று ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், 57 வது மற்றும் 59 வது படையணித் தலைமையகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா இராணுவ தரப்புக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்று வரும் சில முன்னரங்க நிலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டு வன்னியின் நேரடி நிலைமைகளை அவதானித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

புதன், 17 டிசம்பர், 2008

24 ஸ்ரீலங்கா படையினரின் உடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளிடம்!

2008.12.16 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கில் புலிக்குளம், குஞ்சுப்பரந்தன், மலையாளபுரம் மற்றும் முறிகண்டி பகுதிகளை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினரை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தியதில் 300 பேருக்கும் அதிகமான ஸ்ரீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும், படையினரின் 24 உடலங்களும் மற்றும் இராணுவ யுத்த தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

விரைவில் இவ் உடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊடாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாக திரு.புலித்தேவன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத விபரம்.

ஏ.கே-எல்.எம்.ஜி - 2
பி.கே-எல்.எம்.ஜி - 1
ரி-56 துப்பாக்கிகள் - 6


திங்கள், 15 டிசம்பர், 2008

கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு நேரடிப் புகையிரத சேவை!

கொழும்பு புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து, வவுனியா வரை இடம்பெற்ற புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த இப் புகையிரத சேவை நாளையில் இருந்து வவுனியா வரை தொடரும்.

இப் புகையிரத சேவையினை இன்று 2008.12.15 ஆம் திகதி தொடக்கம் வவுனியா வரை நகர்த்த சமூக சேவைகள், சமூக நலன்புரித்துறை அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா முயற்சியினை மேற்கொண்டிருந்தார், பாதைச் சீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப வேலைகள் முற்றுப் பெறாததால் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வவுனியா வரையான நேரடிப் புகையிரதச் சேவை தொடருமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் செவ்வி

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தினர் மூவருக்கு துப்பாக்கிச் சூடு, ஒருவர் ஸ்தலத்தில் பலி!

மட்டக்களப்பு, ஆரையம்பதி 3 ஆம் குறிச்சியில் வசிக்கும் மாவிலங்குதுறை பாடசாலை ஆசிரியரான செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளையின் வீட்டில் 2008.12.13 ஆம் திகதி இரவு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அக் குடும்பத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

45 வயதுடைய ஆசிரியர் திரு.செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை (மனோகரன்) அவரது மனைவி திருமதி தயாளினி மற்றும் 17 வயதுடைய மகள் கிருஷ்ணபிள்ளை நிஷாந்தினி ஆகிய மூவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தாய் தயாளினி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

தந்தையும் மகளும்(செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை, கிருஷ்ணபிள்ளை நிஜாந்தினி) ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

வியாழன், 11 டிசம்பர், 2008

முறிகண்டி ஸ்ரீலங்கா படை வசம்!

வன்னியை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினரின் 57 ஆம் படைப் பிரிவினர் கொக்காவிலுக்கு வடக்காகவும், அக்கராயன்குளத்துக்கு கிழக்காகவும் நகர்ந்து 2008.12.10 ஆம் திகதி நேற்றுப் பிற்பகல் முறிகண்டியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
ஒளிப்பேழை







புதன், 10 டிசம்பர், 2008

கிளிநொச்சிக்கு மேற்காக படையினரும் விடுதலைப்புலிகளும் பலத்த மோதல்!

ஸ்ரீலங்கா படைதரப்பினரின் உடலங்களும், யுத்த உபகரணங்களும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சிக்கு மேற்குத் திசையிலுள்ள ஊற்றுப்புலம், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கான முன்நகர்வில் 2008.12.10 ஆம் திகதி இன்று காலை வேளையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஸ்ரீலங்கா படை தரப்பில் 60 படையினர் கொல்லப்பட்டும் 120 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா படை தரப்பினரின் 12 உடலங்களும் மற்றும் இராணுவ யுத்த உபகரணங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள்:

1. பிகே - எல்.எம்.ஜி. - 02
2. ஆர்.பி.ஜி. - 02
3. ஏகே-எல்.எம்.ஜி. - 04
4. ரி.56-2 ரக துப்பாக்கிகள் - 11
5. இரவு பார்வை காட்டி - 01
6. லோ-01
















More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----