ஞாயிறு, 17 பிப்ரவரி, 2008

மூக்குடைந்து போன சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ


13 ஆவது திருத்தத்தின் கீழ் இனநெருக்கடிக்கு தீர்வில்லை
ஏற்றுக் கொண்டார் அமெரிக்க தூதுவர்

[14 - February - 2008]
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இரு தசாப்தங்களை பூர்த்தி செய்திருக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒரு போதும் நிறைவேற்றப் போவதில்லையென வட, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவும் 13 ஆவது திருத்தத்தின் மூலம் இனநெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர முடியாதென்பதை ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை அந்நாட்டின் தூதுவர் ரொபேர்ட் பிளேக் நேற்று புதன் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், யாழ்.மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்;

"தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களாகிய நாம் தற்போது நாட்டின் நிலைவரம், மனித உரிமை மீறல் விவகாரம், தமிழர் பகுதிகளில் இடம்பெற்றுவரும் விமானத் தாக்குதல்கள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள் தொடர்பாக மேற்குலகின் தூதுவர்களை சந்தித்து விரிவாக எடுத்துரைத்து வருகிறோம்.

இத்தாலி, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர்களை சந்தித்துள்ளோம். அதன் ஓரங்கமாகவே அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக்கை சந்தித்தோம்.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் மீதான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினோம். தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை உடனடியாக கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் வலியுறுத்தினோம். இலங்கை இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக 1987 இல் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தம் எந்த விதத்திலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாதென உடனடியாக தமிழ்த் தலைவர்கள் இந்திய, இலங்கையின் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையும் அமெரிக்கத் தூதுவரிடம் சுட்டிக்காட்டினோம்.

இன நெருக்கடிக்கு தீர்வு காண 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஆக்கபூர்வமான பயனைத்தரப் போவதில்லையெனவும் ஒற்றையாட்சி முறைக்குள் ஒருபோதும் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாதெனவும் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். அத்துடன், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றின் மூலமே பல தசாப்தகாலங்களாக தொடரும் இனநெருக்கடிக்கு நிலையான தீர்வொன்றைக் கொண்டுவர முடியுமென்பது தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை என்பதையும் அவரிடம் கூறினோம். மேலும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விமானத்தாக்குதல் நடத்தப்படுவதையும் தாக்குதலின் பின் புலிகள் கொல்லப்படுவதாக போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தூதுவரிடம் சுட்டிக்காட்டினோம்.

இவற்றை கவனமாக செவிமடுத்த தூதுவர் பிளேக், உரிய தரப்பினரின் கவனத்துக்கு இவற்றை கொண்டு செல்வதாக உறுதியளித்தார். அதேசமயம், 13 ஆவது திருத்தத்தின் கீழ் இனநெருக்கடிக்கு தீர்வு காணமுடியாதென்பதையும் தூதுவர் ஏற்றுக்கொண்டார்" என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.



அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
[16 - February - 2008]

13 ஆவது திருத்தத்தின் கீழ் இன நெருக்கடிக்கு தீர்வில்லை - ஏற்றுக்கொண்டார் அமெரிக்கத் தூதுவர் எனும் தலைப்பில் நேற்று முன்தினம் வெளியான தலைப்புச் செய்தி தொடர்பாக அமெரிக்க தூதுவர் ரொவேர்ட் பிளேக் விளக்கமளித்துள்ளார்.

அவரின் விளக்கம் வருமாறு;

2008 பெப்ரவரி 14 ஆம் திகதி உங்கள் தினக்குரலில் பிரசுரித்த என்னுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடான சந்திப்பு சம்பந்தமாக மேலும் விளக்கிக் கூற விரும்புகின்றேன். "13 ஆவது திருத்தத்தின் கீழ் இன நெருக்கடிக்கு தீர்வில்லை - ஏற்றுக்கொண்டார் அமெரிக்க தூதுவர்" எனும் தலைப்பின் கீழ் பிரசுரமானதை வித்தியாசமான முறையில் நான் கூறியதாக நம்புகிறேன். மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஓர் நல்ல முதல் அத்தியாயமாக 13 ஆவது திருத்த அமுலாக்கம் அமையுமென அமெரிக்கா நம்புகின்றது.

மேலும் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. சர்வகட்சிக் குழுவின் முக்கிய பணிகளைத் தொடர்வதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் எமக்கு நம்பிக்கையூட்டுகிறது. தமிழ் மற்றும் ஏனைய சமூகங்களின் அபிலாஷைகள் நிறைவேறக்கூடிய அதிகாரப் பகிர்வுக்கான இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக் கூடிய நல்ல சந்தர்ப்பத்தை சர்வகட்சிக் குழு வழங்குகிறது. அதன்மூலம் ஒரு ஐக்கிய இலங்கையினுள்ளே நம்பிக்கையும் வாய்ப்புகளுமுள்ள எதிர்காலத்தை அநுபவிக்கலாமென வன்னியிலும் மற்றுமிடங்களிலும் வசிக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடியும்.

எனது கருத்துக்களை விளக்கிக் கூற சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி.

சுரேஸ் பிரேமச்சந்திரன் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் கிரகித்துக் கொள்ளாமல் அவசரத்தில் விடப்படும் அறிக்கைகள் போன்றே தெரிகின்றது, இவர் ஈபிஆர்எல்எவ் எனப்படும் இயக்கத்தில் பொறுப்பு வாய்ந்தவராக இருந்ததுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு இலங்கை வந்தடைந்த இந்திய அமைதி காக்கும் படையினருடன் சேர்ந்தியங்கிய மண்டையன் குழுவுக்கு (ஈபிஆர்எல்எவ்) தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இக்குழு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பான காலங்களில் பாராளுமன்ற ஆசனம் கிடைக்காத காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சரணடைந்து அவர்களின் சிபாரிசுவில் இப்போது பாராளுமன்ற ஆசனம் பெற்று கிரகிக்காமல் எல்லாம் பதில் அளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆக இவர் பொறுப்பில் இருந்த போது ஈபிஆர்எல்எவ் அமைப்பு எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கும் என்பதை இத்தால் அறிய முடிகின்றது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----