வியாழன், 27 செப்டம்பர், 2007

சுன்னாகத்தில் பொதுமக்கள் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல்!

இன்று காலை 9.50 மணியளவில் யாழ்ப்பாணம் சுன்னாகம் மத்திய சந்தை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டும் 17 பேருக்கும் மேற்பட்டோர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொல்லப்பட்டடோர் விபரம்:
1.நாகமுத்து ராசையா (வயது 70) அளவெட்டி.
2.சீனியர் சண்முகராஜா (வயது 49)
3.செல்லையா அசோகன் (வயது 37) கல்லாரை, மல்லாகம்.

படுகாயமடைந்தோர் விபரம்:
1.காசிப்பிள்ளை (வயது 90) கண்ணகி அம்மன் கோவிலடி அளவெட்டி
2.நளாயினி (வயது 45) அளவெட்டி வடக்கு
3.தமிழ்ச்செல்வன் (வயது 35) அளவெட்டி மேற்கு
4.எஸ்.குணமணிதேவி (வயது 50)
5.ஜீ.பொன்னையா (வயது 63) வயது
6.வீ.கமலவாஸ் (வயது 48)
7.ராசையா சிறிசண்முகராஜா (வயது 40)
8.கே.அமுதராணி (வயது 42) தொல்புரம் கிழக்கு
9.சின்னத்தம்பி செல்லத்துரை (வயது 45)
10.ஏ.காந்திமதி (வயது 43)
11.ரீ.சீதாலக்ஷ்மி (வயது 57)
12.ரீ.நாகேஸ்வரி (வயது 46)
13.நந்தகுமார் அளவெட்டி
14.விசாலாட்சி
15.ஜீவன் (வயது 34)
16.ஜே.ஜெகதீஸ்வரன் (வயது 16)
17.ரீ.சர்மிளா (வயது 16)

புதன், 26 செப்டம்பர், 2007

யாழ்.கிளைமோர் தாக்குதலில் இருவர் பலி

நேற்றுக் காலை யாழ்ப்பாணம், வலி மேற்கு சண்டிலிப்பாய் பிரதான வீதி சித்தங்கேணியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரான 42 வயதுடைய சாரதா பரஞ்சோதி என்பவரும் உடுவில் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக பணிபுரியும் 25 வயதுடைய சிறிகாந்தன் நிஷாந்தன் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

பொது மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதலை "களத்துமேடு" கண்டிக்கின்றது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் கேபி கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தாய்லாந்து நாட்டின் பாங்கோக் நகரில் கைதானதாக "பாங்கோக் போஸ்ட்" பத்திரிகைச் செய்தி பிரசுரித்துள்ளது.

இவர் இன்ரபோல் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top Tamil Tiger arrested in Bangkok

(BangkokPost.com, Agencies)
Thailand has arrested the finance chief of the Tamil Tigers of Sri Lanka, allegedly the group's chief procurer of arms.

Kumaran Pathmanadan is reported to have been arrested by police in Bangkok on Monday evening. He is one of the top officials in the Liberation Tigers of Tamil Eelam, the formal name of the group.

Pathmanadan apparently had obtained Thai citizenship. He continued to run the global network of LTTE offices and its weapons procurement, logistics and money laundering operations.

He has been on Interpol's Most Wanted list for a number of years. He has also been implicated in several assassinations of political leaders.

The online newspaper Asian Tribune called him "the king pin of Tiger arms smuggling".

"He is a noted smuggler of arms and narcotics. Operating with bank accounts opened in London, Frankfurt, Denmark, Athens and Australia... he has had a free run so far," the newspaper alleged

His arrest followed the detention in Ranong province last month of three Tamil Tiger operatives trying to buy guns and 45,000 rounds of ammuntion.

All four were suspected of running a Tamil Tiger gun-running ring centered in Thailand.

Pathmanadan, who also had a number of aliases, has recently been the subject of a manhunt that stretched to Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Police said they believed he had bank accounts in London, Frankfurt Denmark, Athens and Australia and has over 200 passports for his use.

He and his group are suspected of running weapons purchased Thailand and neighbouring countries to the Tamil Tigers in Sri Lanka. The Tigers have been desinated as a terrorist group by most western countries, but not Thailand.

A Jane's Intelligence report on the group stated that despite the cease-fire agreement in Sri Lanka, the LTTE continued to re-supply cadres. It said:

"While Cambodia is the hub of the LTTE East Asia Network, Thailand continues to serve as the most important country for trans-shipment of munitions and coordination of logistics... its excellent communications infrastructure, proximity to former war zones in both Cambodia and [Burma] and its western coastline facing the Bay of Bengal and Sri Lanka beyond have made Thailand the ancient interface between the LTTE's war zone."

ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

தாஜ்மஹால் சீனாவில் கட்டப்பட்டுள்ளது!


இந்தியாவில் ஆக்ராவுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் இனிமேல் சீனாவுக்கு படையெடுக்கப் போகின்றார்கள் ஏனெனில் தாஜ்மஹாலைப் போன்று சீனாவின் நிங்சியாவில் உருவாக்கி விட்டார்கள்.

சனி, 8 செப்டம்பர், 2007

ஈபிடிபி பிரதேசசபை வேட்பாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆதரவாளர்களும் சாவகச்சேரி மற்றும் மன்னார் பிரதேசசபை வேட்பாளர்களுமான இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஈபிடிபியின் ஆதரவாளரும் அக்கட்சியின் சாவகச்சேரி பிரதேசசபை வேட்பாளருமான கைதடி வடக்கைச் சேர்ந்த 57 வயதுடைய செல்லையா ஜெயபாலசிங்கம்(ஜெயசீலன்) என்பவர், அவரது வீட்டின் முன்பாக துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை ஈபிடிபியின் மன்னார் பிரதேசசபையின் வேட்பாளர் ஒருவரும் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் ஈபிடிபியின் ஆதரவாளரும் அக்கட்சியின் மன்னார் பிரதேச சபைக்கான வேட்பாளருமான வவுனியாவைச் சேர்ந்த 39 வயதுடைய இராசையா யோகானந்தம்(மோகன்) என்பவர் மன்னார், எழுத்தூரில் உள்ள அவரின் வீட்டின் முன்பாக துப்பாகிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வல்வையில் உப்பு விளைந்துள்ளது!

வல்வை பரவைக் கடலில் விளைந்த உப்பை அள்ளுவதற்கு மக்கள் கடகங்களுடன் திரண்டு செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

வல்வைக் குடாக் கடலின் உப்புக்கழி, கொள்ளையன்தூவு, அலைவாய்க்கடல், ஆனைவிழுந்தான், மண்டான்கரை, மாதுவில் முழக்கன், உப்புவல்லை போன்ற பகுதிகளில் செறிவாக உப்பு விளைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 7 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகள் இலங்கை இனத்தவர்கள் அல்லர் - ரோஹிக போகல்லாகம

விடுதலைப் புலிகள் அமைப்பில் தமிழர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் எவரும் இலங்கை தேசத்தினர் அல்லர் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம பெல்ஜியம் நாட்டு பிரசல்ஸ் நகரில் தெரிவித்துள்ளார். பிபிசி உலகச் சேவையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இந் நாட்டின் சமாதானத்திற்காக சர்வ கட்சிக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசு இறுதிக்கட்ட முடிவுக்கு வந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசு புலிகளை சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அழைத்திருந்த போதிலும் அவர்கள் பின்வாங்கும் நடவடிக்கைகளிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும் அவர்கள் தீவிரம் காட்டும் ஜனநாயக திட்டங்களினூடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தேசிய ரீதியிலான பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் எதிராக புலிகளினால் பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அதன் போது இடம் பெறும் மேலதிக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலும் இராணுவத்தினர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

(06.09.2007 திவயின)
நன்றி: வீரகேசரி

விடுதலைப் புலிகளில் 19539 மாவீரர்கள் பதிவாகியுள்ளனர்!




தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1982.11.27 - 2007.08.31 வரையான காலப்பகுதியில் மரணித்த மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை 19539 பேர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு ஏடான "விரிப்பு" தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் 7041 பேர்
மட்டக்களப்பு-அம்பாறை 4966 பேர்
வன்னி மாவட்டம் 2879 பேர்
திருகோணமலை மாவட்டம் 1763 பேர்
முல்லைத்தீவு மாவட்டம் 1449 பேர்
மன்னார் மாவட்டம் 1110 பேர்
வெளி மாவட்டம் 331 பேர்

புதன், 5 செப்டம்பர், 2007

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாய்மாரும் குழந்தைகளுமாக எண்மர் சரண்!

யாழ்ப்பாணத்தில் தினமும் நிகழ்ந்து வரும் மனிதப் படுகொலை கலாசார வாழ்வில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் அன்றாடம் மக்கள் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் அலுவலகத்தில் சரணடைந்து உயிரைப் பாதுகாத்துத் தருமாறு கேட்கின்றனர்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் சரணடைந்த எண்மரை நீதிமன்றத்தில் பொலிஸார் ஒப்படைத்தனர்.

கொடிகாமத்தை சேர்ந்த 30 வயதுடைய தாயும், அவரது 13,10,மற்றும் மூன்று வயதுடைய மூன்று பிள்ளைகளும், சாவகச்சேரியைச் சேர்ந்த 30 வயதுடைய தாயும் அவரது 8,5,மற்றும் ஒரு வயதுடைய மூன்று பிள்ளைகளுமாக எண்மர் சரணடைந்துள்ளனர்.

தாய்மாரையும் குழந்தைகளையும் சிறைச்சாலையில் தடுத்து வைக்க முடியாததால் இருபாலையில் உள்ள சிறுவர் இல்லத்தில் நீதியமைச்சின் அங்கீகாரத்தினைப் பெற்று பாதுகாக்குமாறு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் ஆகியோருக்கு யாழ் மாவட்ட நீதிபதி திரு.இ.த.விக்னராஜா ஆணை பிறப்பித்தார்.

கடந்த இரு மாதங்களில் உயிரச்சம் காரணமாக 61 பேர் சரணடைந்து யாழ்ப்பாண சிறைச்சாலையில் பாதுகாக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 4 செப்டம்பர், 2007

இலங்கையில் இரண்டரை மில்லியன் நாய்கள்!

இலங்கையில் உள்ள மக்களின் தொகை 18 மில்லியனாகும், ஆனால் இங்குள்ள நாய்களின் தொகை இரண்டரை மில்லியன் என கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

திங்கள், 3 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகளின் கனரகவாகனம் மோதியதில் கணவனும் மனைவியும் பலி!

கிளிநொச்சி் இரத்திரனபுரம் பகுதியில் 2ஆம் திகதி பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கனரக வாகனம் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பச்சிலைப்பள்ளி புலோப்பளையைச் சேர்ந்த 58 வயதுடைய யாக்கோப் சந்தியாப்பிள்ளையும் அவரது மனைவியான 51 வயதுடைய திரேசம்மாவும் கொல்லப்பட்டனர்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகளிடம் ஆளணி பற்றாக்குறை.





தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினுள் ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் வன்னிப் பகுதியில் பலாத்காரமாக மக்களை தமது இயக்கத்தில் சேர்த்து வருவதாக வோய்ஸ் ஒவ் அமெரிக்கா தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்த சுட்டியில் செய்தியைக் கேட்கலாம்.
http://www.voanews.com/mediaassets/uspolicy/2007_08/Audio/mp3/13722.mp3

சனி, 1 செப்டம்பர், 2007

கைதாகிய சிறுவர்கள் மீது ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணை


திருக்கோவில் சங்குமன்கண்டி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியினருடன் ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் தாக்குதல் நடாத்திய போது எண்மர் கைதாகியுள்ளதுடன் இவர்களிடமிருந்து வெடிபொருட்களையும் கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா படை தரப்பு செய்திகள் கூறுகின்றன.

இவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டோர் பெயர் விபரம்
1.ஜீவராசா சுதன் - வயது 15
2.சாமுத் நாடன் திரவுல் - வயது 19
3.பெருமாள் சின்னத்தம்பி - வயது 15
4.தர்மரதம் ரமேஷ் - வயது 16
5.செல்வராசா சுவராஜினி - வயது 15
6.துரைசிங்கம் சுமன் நமீனா - வயது 14
7.விக்னேஷ்வரன் வினோதினி - வயது 16
8.தவராசா ரசீனா - வயது 14

யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக சிறுவர்களை அழைத்து வந்த போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்விடயம் சம்பந்தமாக விடுதலைப் புலிகள் எதுவும் தமக்குத் தெரிவிக்கவில்லையென யுனிசெப் தெரிவித்துள்ளது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----